Deprecated: Creation of dynamic property biz::$db_conn is deprecated in G:\PleskVhosts\madurai-biz.com\maduraibiz\classes\db.php on line 16
மூலிகை மருத்துவம்

Madurai - Mooligai maruthuvam

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்

மருதம் பட்டை,Marutham Pattai மருத்துவ குணங்கள்

MARUTHAM PATTAI PODI - ARJUN TREE POWDER

மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது.வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.

மாத விலக்கு

சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியான தேதிகளில் வருவதில்லை . அப்படிப்பட்டவர்கள் மருதம் இலைகளை காய வைத்து சூரணமாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி முறை, சீரடையும்.
மேலும், மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீர மருதம் பட்டை, வேப்பம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு பெருங்காயம் சேர்த்து காலை மற்றும் மாலை மோருடன் கலந்து பருகி வர, மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீரும்.

வாய்ப்புண்

வாய் புண், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை கலந்து தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி , வாய்ப்புண் குணமாகும்.
மேலும் நன்கு உலர்ந்த மருதம்பட்டையை நன்கு பொடித்து அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனைகள் குணமாகும்.

இரத்தக்குழாய் அடைப்பு

இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது.
மேலும் இதயத்தை வலுவுடன் வைக்கும் ஆற்றல் வெண்தாமரைப் பூவின் பொடியில் உள்ளது. இரண்டு கிராம் அளவிற்கு இரண்டு பொடியையும் எடுத்து வெந்நீர் அல்லது பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் அருந்தினால் இரத்தக் குழாய் அடைப்பு வராமால் தடுக்கலாம்.

மன உளைச்சல்

இந்த நவீன காலத்தில் வாலிபர்கள் முதல் பெரியோர்கள் வரை மன உளைச்சல் உடையவர்களாகவே உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பயம் ,கோபம், தூக்கமின்மை போன்ற பிரச்னை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதம் பட்டை, வில்வம், துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து, காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர இந்த பிரச்னைகள் விலகும்.

இதய நோய்

இதயம் சார்ந்த நோய்களுக்கு மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலக்காய், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து பொடியாக்கி காலை மற்றும் மாலை வேளைகளில் 5 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய் விரைவில் குணமடையும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து அதில் 2 ஏலக்காய் , சுக்கு சேர்த்து காலை மற்றும் மாலை வேளைகளில் காய்ச்சி காபி, டீ க்கு பதில் குடித்து வர சர்க்கரை நோய் தீரும்.

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மருதம் பட்டை மற்றும் சிறிதளவு சீரகம் , சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி காலை மற்றும் மாலை 5 கிராம் அளவு எடுத்து 1டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும் அதை ஆற வைத்து குடித்து வந்தால் இரத்த அழுத்த நோய் உங்களை விட்டு பறந்து போகும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதம் பட்டை பயன்கள்

மருதம் பட்டையை ஒன்றிரணடாக இடித்து அதை நீரில் இட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அந்த நீரைக் கொண்டு புண்களை கழிவிவர புண்கள் விரைவில் ஆறும்.
மருதம் பட்டையை பொடித்து பல் துலக்கி வர பல் வலி, பல் ஈறு வீக்கம் ஆகியவை குணமாகும்.
மருத மரத்தின் இலையை அரைத்து பாலில் கலந்து காலை மாலை ஆகிய இருவேளை 3 நாட்கள் குடித்துவர பித்தவெடிப்பு குணமாகும்.
மருதம் பழத்தை நீராவியில் அவித்து பிசைந்து புண்களின் மீது வைத்து கட்டிவர கொடிய புண்களும் ஆறிவிடும்.

ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா ?

ஒரு சுத்தமான கிளாசில் மிதமான சூட்டில் வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

அவற்றில் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடி, ஒரு ஸ்பூன் சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் தூக்கம் வர பானம் தயார்.

இந்த பானத்தை சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் அருந்தலாம். ஆனால் இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் இந்த பானத்தை அருந்தவேண்டும்.
Buy Marutham Pattai powder from Amazon